மாசாணி அம்மன் கோயில் ரூ.120 கோடி நிரந்தர வைப்பு நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

கோயில் நிர்​வாகம் மற்​றும் அறநிலை​யத் துறை தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சண்​முகசுந்​தரம், அறங்​காவலர்​களை நியமிக்க விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு பரிசீலனை​யும் நடந்து வரு​கிறது. வைப்பு நிதியை பயன்​படுத்தும் திட்​ட​ம் இல்லை என்​றார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், கடந்த ஓராண்​டாக இந்த கோயிலுக்கு அறங்​காவலர்​களை நியமிப்​ப​தில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் அறங்​காவலர்​கள் நியமனத்தை துரிதப்​படுத்த வேண்​டும் என்​றும், கோயில் நிரந்தர வைப்பு நிதியை பயன்​படுத்​தும் முன்​பாக சட்ட விதி​களை கண்​டிப்​பான முறை​யில் கடைபிடிக்க வேண்​டும் என்றும் அறநிலை​யத் துறைக்கு நீதிபதிகள் உத்​தரவிட்​டுள்​ளனர்​.

Source link