மத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 5 பேர் பலி!

மத்தியப் பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடசராய் காவல் நிலைய

எல்லைக்குட்பட்ட கிக்ரதலாப் கிராமத்திற்கு அருகே. ஜபல்பூர் – அமர்கண்டக் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பிக்-அப் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், டயர் பஞ்சர் ஆனதால் அதைக் சரி செய்ய கீழே இறங்கி சாலையோரம் நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது.

இதில் பிக்-அப் வாகனத்தின் ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Source link