சேலம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலர், சென்னை காவல் ஆணையரும் புதிதாக நியமிக்கப்பட்டனர். தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமாருக்கு பதிலாக, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறைச் செயலராக இருந்த மணிவாசன் பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (லஞ்ச ஒழிப்புத் துறை) இயக்குநராக இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டார்.
அந்த இடத்துக்கு சைபர் க்ரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, டேவிட்சன் தேவாசிர்வாதம் கூடுதலாக கவனித்து வந்த ஆயுதப்படை டிஜிபி பொறுப்பை மட்டும் சந்தீப் மிட்டலுக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் யார் என்று உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.
