இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலி சர்வதேச கச்சா எண்ணெயின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பின்னர் கச்சா எண்ணெய் விலை சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல். இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 மற்றும் பவுனுக்கு ரூ.320 என விலை குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கும், ஒரு பவுன் ரூ.1,12,480-க்கும் விற்பனை ஆகிறது.
