எத்தனை நாள்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகிறது? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி வெளியான அறிவிப்பு

வருகிற 23-ம் தேதி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதுபோல பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.

அதில் ஒன்றாக, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் எந்தெந்த தேதிகளில் மூடப்பட உள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 21-ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகின்றன.

இந்தக் கட்டுப்பாட்டை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Source link