இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் இன்று (ஏப்.13ம் தேதி) அதிகாலை கடையில் ஐஸ்கிரீம் தயாரிக்க பால் காய்ச்சும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக கடையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு, கடை தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் கடை முழுவதும் தீ மளமளவென பரவியது.
கடையின் ஷட்டர் உட்புறமாக மூடப்பட்டு இருந்ததால் கணவன்- மனைவி இருவரும் கடையில் இருந்து உடனடியாக வெளியேற முடியால் அங்கேயே சிக்கிக்கொண்டனர். மேலும் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற வீரர்கள், தீ விபத்தில் சிக்கிக் கொண்ட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
