விக்கிரவாண்டி தொகுதியில் வீறுகொண்டு எழப்போவது யார்?

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாகுறைக்கு தீர்வு காண வேண்டும். விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றுவர அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும்.

மேலும் தொலை தூரங்களில்இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளை, விக்கிரவாண்டியில் நிறுத்த வேண்டும். கெடாரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சூரப்பட்டில் உழவர் சந்தை தொடங்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ளஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஏரிகளை தூர்வார வேண்டும். பம்பை கால்வாய், வராக நதியை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சிவக்குமார், நாதகசுபா, தவெக விஜய் வடிவேல் ஆகியோரது களப்பணி தீவிரமடைந்துள்ளது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றரை ஆண்டில், ‘நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.470 கோடி நிதியை பெற்று தந்தது, திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாறு துரிஞ்சலாற்றை இணைப்பதற்காக நிலம் கையகப்படுத்த நிதியை பெற்று தந்தது, அன்னியூரில் அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்தது, மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைக்கநிலம் ஒதுக்கீட்டுக்கு அரசாணை பெற்றது, ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை, புதிதாக கஞ்சனூர் ஒன்றியத்தை கொண்டு வந்தது, விக்கிரவாண்டியில் உழவர் சந்தை, இறைச்சி அங்காடி, சமுதாய கூடம் கொண்டு வந்தது, பம்பையாற்றில் அகழாய்வு பணிகளை தொடங்கியது என தான் செய்த சாதகனைகளை முன்வைத்தும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து மக்களை சந்தித்து வருகிறார் திமுக எம்எல்ஏ அன்னியூர்சிவா.

Source link