எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீஸார் விபத்தில் காயமடைந்த சந்தியா, பிரதீப் குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா, விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link