மும்பை: வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்(40). இவர் நடித்த துராந்தர் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ் அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சினிமா பட தயாரிப்பாளர் ரோகித் ஷெட்டி வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மும்பையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியின் உத்தரவுப்படி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சூழ்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
