விற்பனைக்காக தவறாக வழிகாட் டும் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., கடிவாளம்

மும்பை: வாடிக்கையாளர்களை தவறாக வழிகாட்டி, சேவைகள் அல்லது நிதி திட்டங்களை வங்கி ஊழியர்கள் விற்பனை செய்வதை தடுக்க, அவர்களுக்கான விற்பனை ஊக்க திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்து உள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு வழிகாட்டுதல்களில் இந்த பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

அதில், ஊழியர்கள் மற்றும் நேரடி முகவர்கள் தவறான விற்பனையில் ஈடுபட தூண்டும் வகையிலான எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

Source link