தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்றது. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது மத்திய அரசை பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
பெரியார் -அண்ணா – கருணாநிதி காட்டிய பாதையில், தமிழகம் எப்போது நீதி, கண்ணியம்,கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது. நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
