மாதவரம்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் வழக்கறிஞர் எஸ்.சுதர்சனம், தொகுதிக்கு உட்பட்ட புழல் ஒன்றியம் காவாங்கரை, பாலாஜி நகர், கிருஷ்ணாநகர், சக்திவேல்நகர், காந்தி தெரு, திரு.வி.க.தெரு, ஜீவா தெரு, வள்ளுவர் தெரு, கண்ணப்பசாமி நகர், தியாகி சங்கரலிங்கனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம், திமுகவின் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர்ந்து, கோட்டையில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகவும், இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக நானும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் மாதவரம் தொகுதியில் விடுபட்டுப்போன பல்வேறு சாதனைத் திட்டங்களை தடையின்றி தொடர முடியும்.
