இன்றைய தினம் வெளியான மிக முக்கியமான ஒரு கருத்துக்கணிப்பு திமுக 36 சதவீதத்தையும் அதிமுக 33 சதவீதத்தையும் தமிழக வெற்றிக்கழகம் 24 இல் இருந்து 27 சதவீதத்தையும், நாம் தமிழர் கட்சி 3 சதவீதத்தையும் பெறும் என சொல்லி இருக்கிறது.
வில்லிவாக்கம் தொகுதியில் துர்கா ஸ்டாலின்
இந்த சூழலில் தான் நான்குமுனை போட்டியில் திமுக comfortable ஆன ஒரு வெற்றியை பெரும் என்னை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருத்துக்கணிப்புகள் சற்றே பாதகமான விடைகளை தந்திருக்கின்றன.
வில்லிவாக்கம் தொகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். பெரிய அளவில் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாதவர் ஆகவும் ஒரு குடும்ப தலைவியாக மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட துர்கா ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது
இழுபறியில் வில்லிவாக்கம் தொகுதி
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாகத்தான் துர்கா ஸ்டாலின் இன்றைய தினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவர்கள் இருவருமே பெரும் படையோடு தொகுதியில் சுற்றி வருகின்றனர். திமுகவும் தவெக -வும் கடுமையான போட்டியை அமைத்துள்ளதால் அதிமுக வில்லிவாக்கம் தொகுதியில் காணாமல் போயிருக்கிறது. மேலும் வில்லிவாக்கம் தொகுதியில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு தற்போது இழுபறியாக மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றி கழகம் தான் என்று சொல்லப்படுகிறது.
மேலும் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதோடு பெரம்பூரில் இருக்கக்கூடிய விஜய் -ன் தாக்கம் வில்லிவாக்கம் தொகுதியிலும் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது.
திமுகவின் வியூகம்
சென்னை திமுகவின் கோட்டை என சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான் வில்லிவாக்கம் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பதும் இழுபறியாக இருக்கக்கூடிய தொகுதியை வெற்றி வாய்ப்புக்கான தொகுதியாக மாற்ற முயலும் யுக்தி என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தேர்தல் களம் தினமும் மாறி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு கடுமையானதெரிவித்தது. இதனையொட்டி மக்களவையில் இந்த மசோதாக்களுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதாக்கள் நிறைவேறவில்லை. இது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெற்றியாக கருதப்பட்டது.
இந்த சம்பவம் தேர்தல் களத்தில் எதிரொலிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் சமீபத்தில் தவெக தலைவர் விஜய் திமுக -வின் இந்த தொகுதி மறுவரையறை மசோதா எதிர்ப்பு நிலைப்பாடு திசை திருப்பும் முயற்சி என விமர்சித்திருக்கிறார்.
