பின்னர் பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு அவர், 12 பேர் பயணிக்க கூடிய மினி விமானத்தில் சென்னையில் இருந்து தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க புதுச்சேரி மாநிலம் புறப்பட்டு செல்கிறார். அதன் பின்பு ராகுல் காந்தி சென்னைக்கு திரும்பி வரும் நிகழ்ச்சி எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முக்கிய தலைவர்கள் வருவதையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் எத்தனை பிரமுகர்கள், பழைய விமான நிலையத்தின் உள்ளே வருவதற்கு பாஸ்கள் வழங்குவது? பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
