தரவுக் கசிவுகள் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் போன்ற சாத்தியமான அபாயங்களைத் தடுப்பதற்காக, புதிய விதிகளின்படி, நம்பகமான சான்றிதழ், உள்ளூர் சோதனை மற்றும் கடுமையான ஒப்புதல்கள் ஆகியவற்றில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தப்பட உள்ளது. சான்றிதழ் பெறாத தயாரிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
புதிய விதிகளின்படி, இந்தியாவில் விற்கப்படும் எந்தவொரு இணைய இணைப்புள்ள சிசிடிவி கோமராக்களும், தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச் சான்றிதழ் Standardisation Testing and Quality Certification (STQC) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சான்றிதழ் பெற வேண்டும். இதில் ஹிக்விஷன்(Hikvision), தகுவா (Dahua) மற்றும் டிபி-லிங்க் (TP-LINK) போன்ற நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும். ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்யாத வரையில், இணைய வசதியுள்ள கேமராக்களை விற்பனை செய்வதிலிருந்து இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும். மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கேமராக்களின் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அரசு கண்காணிக்கும்.
இறக்குமதி செய்யப்படும் கண்காணிப்புக் கருவிகளுடன் தொடர்புடைய இணையப் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலையே இந்த ஒழுங்குமுறைக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
