அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு
காலக்கெடு நிர்ணயித்த போதிலும், தாக்குதலையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
ஈரானின் தெற்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் F-15E போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து 2 விமானிகள் கீழே குதித்து உயிர் தப்பினர்.
அவர்கள் இருவரும் ஈரானிடம் மாட்டிவிடக் கூடாது என அமெரிக்கா தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் ஒருவரை உடனடியாக கண்டுபிடித்து மீட்டது.
இந்நிலையில், மற்றொரு விமானியும் பத்திரமாக மீட்கப்பட்டார் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். விமானியை மீட்டெடுக்க எடுத்த முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவற்றின் விவரம்:
