இதன் பின் வெளியே வந்த ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜுன ராஜ், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாங்கள் சிரித்துக்கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம் எனதெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என சிரித்துக்கொண்டே அழுகிறோம். நாங்கள் கேட்ட தொகுதிகளை தந்ததில் மகிழ்ச்சி, ஆனால் எண்ணிக்கை குறைத்துக்கொண்டதில் வருத்தம்.
ம.தி.மு.க.வின் தகுதிக்கு தகுந்தாற்போல் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்றார்.
இதனிடையே, மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கோவில்பட்டி, சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு
ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
