“வளர்ந்த இந்தியா” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் இளைஞர்களின் நேரடிப் பங்கேற்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் அரசு தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ‘NDTV ப்ராஃபிட் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட்ஸ் 2026’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அரசின் முயற்சிகள் உறுதியான பலன்களை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மத்திய அரசில் 12 லட்சத்திற்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் மேலும் பேசுகையில், “வளர்ந்த இந்தியாவை மனதில் கொண்டு இளைஞர்கள் தங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான திறன்கள், வாய்ப்புகள், தன்னம்பிக்கை மற்றும் ஒரு தளத்தை வழங்க அரசு தொடர்ச்சியான மற்றும் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.
4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சிலிண்டர்: புதிய சேவையைத் தொடங்கிய இன்டேன்
கொள்கை உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கேற்பு முக்கியம். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடன் முதலில் ஒரு முறைசாரா கலந்துரையாடலை மேற்கொண்டோம். பிரதமரின் இன்டர்ன்ஷிப் (பயிற்சி) திட்டத்தின் மூலம், நாட்டின் முன்னணி 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதன் வாயிலாக, இளைஞர்களுக்குத் தொழில் துறையின் முதல் உண்மையான அனுபவத்தை நாங்கள் அளிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க இனி அதிகம் செலவாகும்: கட்டணத்தை உயர்த்த கோரிக்கை
நிதியமைச்சர் மேலும் கூறுகையில், “விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகள், விளையாட்டு அறிவியல் ஆதரவு, சிறந்த மருத்துவ சேவைகள், தொழில்நுட்பம் சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் ஆரம்பக்கட்ட சர்வதேச அனுபவம் ஆகியவற்றை வழங்குவதே ‘தேசிய விளையாட்டு கொள்கை 2025’-ன் நோக்கமாகும். இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் அதன் இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் அடுத்த தலைமுறையைத் தயார்படுத்துவதும் உண்மையான தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாகும் .
8ஆவது ஊதியக் குழு: மேலும் இரண்டு கூட்டங்கள்: நல்லது நடக்குமா? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு நான் செய்த முதல் காரியம், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மற்றும் பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவர்களுடன் வெளிப்படையான உரையாடலை மேற்கொண்டதுதான். MyGov India இணையதளம் மூலம் பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அங்கு இளைஞர்கள் தங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தகைய பல ஆலோசனைகள் பட்ஜெட்டிலும் சேர்க்கப்படுகின்றன” என்று நிதியமைச்சர் கூறினார்.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதாரக் கூட்டணிகள் பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
