வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் நட்சத்திரமான நிக்கோலஸ் பூரன், கே.எல். ராகுலைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லக்னோவில் நடைபெற்ற, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது பூரன் பேட்டிங்கில் தடுமாற்றிய போதிலும், 21 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 19 ரன்கள் குவித்து, இந்த சாதனையை படைத்தார்.
தற்போது எல்.எஸ்.ஜி. அணிக்காக 47 போட்டிகள் மற்றும் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பூரன், 10 அரைசதங்களுடன், 39.50 சராசரி மற்றும் 177.30 ஸ்டிரைக் ரேட்டில் 1,422 ரன்கள் எடுத்துள்ளார்.
38 போட்டிகளில், கே.எல். ராகுல் இரண்டு சதங்கள் மற்றும் 10 அரைசதங்களுடன், 41.47 சராசரி மற்றும் 130.67 ஸ்டிரைக் ரேட்டில் 1,410 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த ஐ.பி.எல். சீசனில் இதுவரை பூரன் நான்கு இன்னிங்ஸ்களில் 10.25 சராசரியில் வெறும் 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 85.41 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 19 ஆகும்.
இந்த ஆண்டு 11 இன்னிங்ஸ்களில், பூரன் 13.90 சராசரி மற்றும் 110-க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டுடன் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 33 ஆகும்.
