கவுகாத்தியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வைபவ் சூர்யவன்ஷியை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அப்போது சூர்யவன்ஷி விராட் கோலியிடம் ஆட்டோகிராப் கேட்டார்.
இதையடுத்து, சூர்யவன்ஷி தொப்பியில் கையெழுத்திட்ட விராட் கோலி, “அன்புள்ள வைபவ், மிகச் சிறப்பாக விளையாடினாய்” (Dear Vaibhav, well done) என்ற வாசகத்தை எழுதி அவரை நெகிழ வைத்தார்.
