ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது.
ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பஹ்ரெஸ்தான் கவுண்டியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரியவந்துள்ளது.
