வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் துபாய் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அந்த கப்பலில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது.
டிரோன் தாக்குதலால் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. தீயை அணைக்க கடல்சார் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.
