Krishnasamy About Edappadi Palanisamy,எங்களை எடப்பாடி பழனிச்சாமி அவமானப்படுத்திவிட்டார்..அவருக்கு பாடம் புகட்டுவோம் : புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி – puthiya tamilagam krishnasamy says we will prove edappadi palanisamy wrong

அதிமுக கூட்டணியில் தான் கேட்ட எண்ணிக்கைகளில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால் அக்கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கியை பொறுத்து தான் தொகுதிகள் ஒதுக்கப்படும். புதிய தமிழகம் கட்சி 33 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகளை தான் வாங்கியுள்ளனர். அப்படி இருக்கும்போது அவர் கேட்கின்ற அளவிற்கு எப்படி தொகுதிகளை வழங்க முடியும் என பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் கூட்டணி தொடர்பாக கிருஷ்ணசாமி என்னிடம் பேசவில்லை எனவும் எடப்பாடி கூறினார். ஆனால் நான் இருமுறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன் என கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்தார். இப்படியான நிலையில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தற்போது 61 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றனர். அதற்கான வேட்பாளர்களையும் கிருஷ்ணசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம்

இந்நிலையில் சமீபத்தில் கிருஷ்ணசாமிசெய்தியாளர்களை சந்தித்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம் என கூறியிருக்கின்றார். மேலும் நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் குறிப்பிட்டு சில தொகுதிகளை கேட்டோம். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சம்மந்தமே இல்லாத ஒரு தொகுதியில் எங்களை போட்டியிட சொன்னார். போகாத ஊருக்கு வழி சொல்வது போல அது இருந்தது.

மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கும்போதே பேச்சுவார்த்தையெல்லாம் முடிந்ததாக கூறினார். அதோடு இல்லாமல் பொதுவெளியில் 33 தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகளை தான் பெற்றோம் என அவமதிக்கும் விதமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இது எங்களது சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருக்கின்றது. எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

கிருஷ்ணசாமி உறுதி

மேலும் 2 அல்லது 3 தொகுதிகளுக்காக அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்காமல் தனித்து போட்டியிடுவதை நினைத்து தேவேந்திர குல வேளாளர் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மக்கள் சரியான முடிவை எடுத்திருப்பதாக சொல்கின்றனர்.மேலும் நாங்கள் 61 தொகுதியில் போட்டியிட்டாலும் போட்டியிடாத தொகுதியில் கண்டிப்பாக அதிமுக மற்றும் திமுகவிற்கு ஆதரவு தரமாட்டோம். கண்டிப்பாக தேவேந்திர குல மக்கள் அதிமுக மற்றும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக சொல்கின்றேன் என்றார் கிருஷ்ணசாமி.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியிருப்பது கண்டிப்பாக அதிமுகவிற்கு தான் பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்படுகின்றது. தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் ஒருவர் தான் கிருஷ்ணசாமி. தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே தற்போது அந்த வாக்குகள் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு கண்டிப்பாக கிடைக்காது என்றே தெரிகின்றது.

புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டால் அது அவர்களுக்கு சாதகமாக அமையுமா ? என்பது தெரியவில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்திருந்தால் தென் தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது அந்த வாய்ப்பினை எடப்பாடி பழனிச்சாமி தவறவிட்டார் என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணிக்கு எந்தளவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்சமயம் கிருஷ்ணசாமி எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டிய தீரவேண்டும் என மிகத்தீவிரமாக இருக்கின்றார். கண்டிப்பாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என உறுதியாக கூறியிருக்கின்றார் கிருஷ்ணசாமி. எனவே இதன் மூலம் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் குறிப்பிட்ட அளவில் குறையும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.

Source link