MI vs RCB: "நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் அடித்திருக்க வேண்டும்; ஆனால்…" – ஆட்டநாயகன் பில் சால்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய பில் சால்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

rcb vs mi match

விருது வென்ற பிறகு பேசிய அவர், “கிரிக்கெட்டில் சில நேரங்களில் அதீத மகிழ்ச்சியும், பல நேரங்களில் பின்னடைவுகளும் இருக்கும்.

இவை இரண்டையும் நாம் தலைக்கு ஏற்றிக்கொள்ள கூடாது. முடிந்தவரை மனநிலையைச் சமமாக வைத்திருக்க வேண்டும்.

இன்று களமிறங்கி எனது அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மைதானங்கள் (பெங்களூரு) சில பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானவை அல்ல, எனவே எதிரணியைத் தொடர்ந்து அட்டாக் செய்ய வேண்டும் என்ற மனநிலையை வைத்திருக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வீரராக நமது பலத்தை மறந்துவிடக் கூடாது. போட்டியை வென்று கொடுப்பவராக இருப்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு போட்டியிலும் என்னால் ரன் எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும், அது யாராலும் முடியாது.

rcb vs mi match
rcb vs mi match

ஆனால், விளையாடும்போது ஆட்டத்தில் எவ்வளவு தாக்கத்தை (impact) ஏற்படுத்த முடியுமோ, அந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால் நேற்றையப் போட்டியில் நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

எங்களது இன்னிங்ஸின் இரண்டாவது 10 ஓவர்களில், அவர்கள் சில நேரங்களில் எங்களை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link