One-Third Reservation for Women: Decision Made to Increase Lok Sabha Membership to 816-பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க முடிவு

நேற்று இது தொடர்பாக இரண்டு முறை இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஒன்று எதிர்க்கட்சிகள் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளுடனும், மற்றொன்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளுடனும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதோடு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி எல்லை நிர்ணயிப்பை தொடங்குவதற்கு பதில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லையை நிர்ணயிக்கலாம் என்று அமித் ஷா அரசியல் கட்சிகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி எல்லையை மாற்றியமைத்தால் 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் இதனை அமல்படுத்த வசதியாக இருக்கும் என்றும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் பிறகு தொகுதி எல்லையை மாற்றியமைப்பது அதிக நேரம் பிடிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதோடு 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு கொடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா நடத்தி வரும் பேச்சுவார்த்தை மேலும் சில தினங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ர் ஓரிரு நாட்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தொகுதி எல்லை வரையறை செய்யப்படும்போது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில், தற்போதைய 80 மற்றும் 40 உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 மற்றும் 60 தொகுதிகளாகவும், கேரளாவில் உள்ள தொகுதிகள் 20ல் இருந்து 30 ஆகவும் உயரும். தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் பாதிக்கப்படும். ஆனால் மற்ற மாநிலங்களில் எந்த அளவு எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் அங்கேயும் அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இம்மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது. யூனியன் பிரதேசங்களிலும் மக்களைவை தொகுதிகள் அதிகரிக்கப்படும். இதே போன்று தனித்தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

Source link