ராசிக்கல் அணிவது நேர்மறையான ஆற்றலை தரக்கூடியதாக அமையும். இருப்பினும் எந்த ராசி, என்ன தசை நடக்கிறது போன்ற விவரங்களின் அடிப்படையில் முத்து யாரெல்லாம் அணியலாம், யாருக்கு அது ஒத்து வராது என்று விவரங்களை நீங்க தெரிந்து கொள்வோம்.
ஜோதிடர்கள் ஒருவருக்கு மொத்த அணியுமாறு அறிவுறுத்தினால் அவர் அதை, வெளியில் படித்து அணிய வேண்டும். அப்போதுதான் அதன் பலன் முழுமையாக கிடைக்கும். இந்த ரத்தினம் ஆனது நீர் சார்ந்த ஒரு பொருள் என்பதால் அதை பெண்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சில அறிஞர்கள் முத்துக்களை பெண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்ற கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
முத்து வாங்கும் விதிகள்
சந்திர பகவானின் அருள் மற்றும் அவருடைய ஆற்றலை அதிகப்படுத்தும் விதத்தில் முத்துக்கள் அணியப்படுகின்றன. ஒருவர் முத்து வாங்கும் போது இந்த இரண்டு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. முதலாவதாக முத்து அதன் தனித்துவமான பளபளப்பு, இரண்டாவதாக அதன் மீது தோன்றக்கூடிய வானவில் நிறம் போன்ற மேற்பரப்பு. மேலும் உண்மையான முத்து, அதன் எடை குறைவாகவும், வெள்ளை நிறத்திலும், மென்மையாகவும், சந்திரனின் கதிர்களைப் போல மிகவும் தூய்மையானதாகவும் இருக்கும். இது போன்ற விஷயங்களை மட்டும் வாங்கும் போது உண்மையானது தானா என சோதிக்க உதவும்.
யார் இந்த முத்து அணியலாம்?
சந்திரன் கடக ராசியின் அதிபதியாக குறிப்பிடப்படுகின்றார். சூரியன் கடக ராசியில் சென்றிருக்கும் காலத்தில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பார்கள். குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் இருப்பார். இந்த மாதத்தில் பிறந்த நபர்களும், கடக ராசி சேர்ந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பார்கள். மேலும் என் கணித நிபுணர்களின் படி இந்த காலத்தில் பிறந்தவர்கள் ‘மூல எண்’ (Root Number) 2 ஆகக் கருதப்படுகிறது.
ஒருவர் தன்னுடைய பிறந்த நேரம் சரியாக தெரியாதவர்கள் என் கணிதம் முறைப்படி தங்களின் பேரில் உள்ள முத்துக்களின் மதிப்புகளை கூட்டி மூல எண்ணை கணக்கிடலாம். மூல எண் 2 கொண்டவர்கள், எங்களுடைய வாழ்க்கையில் சுகமான விளைவுகளை தவிர்க்க முத்து அணிவது நல்ல பலனை தரும்.
சந்திரனின் மங்களகரமான விளைவுகள்.
ஜோதிடத்தில் முத்து சந்திரனுக்கு ஒரு ரத்தின கல்லாக பார்க்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனை வலுப்படுத்தும் விதத்தில் அவை அணியப்படுகிறது.
பொதுவாக சந்திரன் ஒருவருடைய மன அமைதி, உணர்ச்சிகளை சமநிலைப்படுத்துவது, தன்னம்பிக்கையை அதிகரிப்பது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவதால் அவர் மனோ காரகன் என அழைக்கப்படுகின்றார். அதனால் முத்து அணிவதால் மனரீதியான எந்த ஒரு பிரச்சனைகளும் விலகி தைரியம் அதிகரிக்கும். யாரெல்லாம் முத்துக்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
