PF Account Blocked,திடீரென்று முடக்கப்படும் பிஎஃப் கணக்கு : என்ன காரணம்? சரிசெய்வது எப்படி? – what is the reasons for pf account block and know how to activate again

பிஎஃப் உறுப்பினர்கள் பலர் தங்களுடைய பிஎஃப் கணக்கு திடீரென்று முடக்கப்படும் (locked) சிக்கலை எதிர்கொள்கின்றனர். பிஎஃப் சேமிப்பு பணத்தை மோசடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்க EPFO அமைப்பு இதுபோன்ற பிஎஃப் கணக்கை தானாகவே முடக்குகிறது. கணக்கில் உள்நுழையும்போது தவறான கடவுச்சொல், UAN அல்லது OTP உள்ளிடுவது அல்லது KYC விவரங்களில் முரண்பாடு இருப்பது போன்ற பல காரணங்களால் பிஎஃப் கணக்கு முடக்கப்படலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடவுச்சொல்லை மாற்றுவதன் மூலமாகவோ அல்லது KYC-ஐப் புதுப்பிப்பதன் மூலமாகவோ இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும்.

பிஎஃப் கணக்கு முடக்கப்பட்டால் என்ன நடக்கும்?

பிஎஃப் கணக்கு முடக்கப்பட்டால் உறுப்பினர்கள் தங்களது EPFO கணக்கிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படுவார்கள். முடக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்களால் UAN அல்லது EPFO உறுப்பினர் போர்ட்டல் மூலம் உள்நுழைய முடியாது. ஆன்லைனில் கிளைம் செய்ய முடியாது. KYC-ஐப் புதுப்பிக்க முடியாது அல்லது கடவுச்சொல்லை மீட்டமைக்க முடியாது.

பிஎஃப் கணக்கு ஏன் முடங்குகிறது?

தவறான கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நீங்கள் மீண்டும் மீண்டும் உள்நுழைய முயற்சித்திருந்தால் உங்கள் பிஎஃப் கணக்கு முடக்கப்படலாம். அங்கீகரிக்கப்படாத நபர்கள் உங்கள் கணக்கை அணுகுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையாக EPFO அமைப்பு தற்காலிகமாக முடக்குகிறது.

உள்நுழையும்போது உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் தவறான UAN அல்லது OTP எண்ணை உள்ளிட்டாலும் பிஎஃப் கணக்குகள் முடக்கப்படலாம். தவறான UAN அல்லது OTP நம்பரைத் தொடர்ந்து உள்ளிடுவது கணக்கிற்கு ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, கணக்கு தற்காலிகமாக முடக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.

EPFO தரவுத்தளத்தில் வங்கிக் கணக்கு அல்லது பான் கார்டு போன்ற KYC விவரங்கள் பொருந்தாமல் போகும்போது பிஎஃப் கணக்குகள் முடக்கப்படலாம். பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்க, பான் கார்டு மற்றும் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் சரியாகப் பொருந்துவதை அமைப்பு கோருகிறது. KYC விவரங்களில் முரண்பாடுகள் இருக்கும்போது மோசடிகள் அல்லது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க EPFO கணக்குகளை முடக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது.

செயலில் இல்லாத UAN கூட கணக்கு முடக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கலாம். பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் செயலில் சரிபார்க்கப்பட்ட UAN எண்ணை EPFO அமைப்பு கோருகிறது. அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க செயலற்ற கணக்கு பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

பிஎஃப் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

சில தற்காலிகச் சந்தர்ப்பங்களில், அந்தத் தடை தானாகவே நீக்கப்பட்டு உங்கள் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முடக்கம் 24 மணிநேரம் வரை நீடிக்கும். எனினும் கடவுச்சொல்லை மீட்டமைப்பதன் மூலம் உடனே சரிசெய்யலாம்.

தவறான கடவுச்சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் கடவுச்சொல்லை மீட்டமைப்பதன் மூலம் உடனடியாக அணுகலைப் பெறலாம். அதிகாரப்பூர்வ EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று, ‘Forgot Password’ இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் 12 இலக்க UAN எண்ணை உள்ளிட்டு, தனிப்பட்ட விவரங்களை வழங்கி இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் OTP நம்பரை உள்ளிட்டு புதிய வலுவான கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.

கடவுச்சொல் அல்லது உள்நுழைவு ஐடி (login ID) உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், புதிய பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்க அதிகாரப்பூர்வ உறுப்பினர் போர்ட்டலில் உள்ள ‘Forgot Password’ இணைப்பைப் பயன்படுத்தலாம்.

தரவு முரண்பாடு காரணமாக உங்கள் கணக்கு முடக்கப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், EPFO உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைந்து உங்கள் KYC-ஐப் புதுப்பிக்க வேண்டும். ‘Manage’ ஆப்சனுக்குச் சென்று ‘KYC’ என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் புதுப்பிக்க விரும்பும் ஆவணத்தைத் தேர்ந்தெடுத்து ‘Save’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் கடவுச்சொல்லை மீட்டமைக்க முடியவில்லை என்றாலோ அல்லது உங்கள் கணக்கில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால், உங்கள் UAN மற்றும் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள EPFO பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி இந்தச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.

Source link