Seeman | ஆட்சியாளர்கள் மட்டும் பொறுப்பல்ல… ஆட்சியை தேர்வு செய்த மக்களும் பொறுப்பாக வேண்டும்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* 6 வயது குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை, 60 வயது மூதாட்டிக்கும் பாதுகாப்பில்லை.

* இந்த சமுதாயமே குற்ற சமுதாயமாக மாறி விட்டது.

* குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதையில் தான் உள்ளனர்.

* ஆட்சியாளர்கள் மட்டும் பொறுப்பல்ல, ஆட்சியை தேர்வு செய்த மக்களும் பொறுப்பாக வேண்டும் என்று கூறினார்.

விஜய் பா.ஜ.க. கூட்டணிக்கு செல்வதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு, என்னைப்பற்றி விஜயிடம் ஒரு முறையாவது கேட்டிருக்கிறீர்களா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

Source link