இந்த நிலையில், ம.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை ரூ.ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம். பொதுத்தொகுதிக்கு ரூ25 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி பிற்பகல் 3 மணிக்குள்ளாக விருப்ப மனுவை வழங்க வேண்டும்.
