தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பாஜக, பாமக, தமாகா, அமமுக, ஐஜேகே, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் பிரபல நடிகரும், இயக்குநருமான இயக்குநர் சுந்தர் .சி. போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பி.டி.ஆரின் தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி. போட்டியிடுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
