மத்திய அமைச்சரும், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. கட்சி மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழ்நாட்டின் கடன் ரூ. 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கை. பணம் எங்கே போச்சு முதல்வரே? நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை. பொய்யான பரப்புரைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
* தமிழக அரசின் வருவாய் அதிகரிக்க GST-யும் ஒரு காரணம்.
* நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு மாநில அரசுதான்.
