valarpirai ashtami வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் என்ன கிடைக்கும்? அஷ்டமியில் வெற்றி தரும் 3 வழிபாடுகள்

அஷ்டமி என்றாலே பைரவர் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தேய்பிறை அஷ்டமி எந்த அளவிற்கு சிறப்பானதோ, அதே அளவிற்கு சிறப்புமிக்கது வளர்பிறை அஷ்டமி. தொடர்ந்து 6 வளர்பிறை அஷ்டமிகளில் பைரவரை வழிபட்டால், நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும். ஆறு வளர்பிறை அஷ்டமிகளில் பைரவ வழிபாடு நிறைவடைந்தப் பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும் என சொல்லப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற நியதி கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப் பெருமானை வழிபடலாம்.

வளர்பிறை அஷ்டமி வழிபாட்டு பலன்கள் :

எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் கால பைரவர். பைரவரை வழிபட சிறந்த நாளாக அஷ்டமி தினம் கருதப்படுகிறது. திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது. பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி, அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான்.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நிற்பவர். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பவர் என சொல்லப்படுகிறது.

அஷ்டமியில் வெற்றி தரும் 3 வழிபாடுகள் :

அஷ்டமி திதி, கஷ்டங்கள் போக்கக் கூடியது. ஆனால் அஷ்டமியில் எந்த காரியத்தை துவங்கினாலும் அது வெற்றியை தராது என்ற கருத்தும் மக்களிடம் உள்ளது. ஆனால் அஷ்டமி திதியில் துவங்கினாலும் அந்த காரியம் வெற்றியை தர வேண்டும் என்றால், அஷ்டமி நாட்களில் 3 முக்கியமான வழிபாடுகளை செய்தாலே போதும்.

1. அஷ்டமி திதியின் உக்கிரமான ஆற்றலை உங்களுக்கு சாதகமாக மாற்றி, வெற்றியை குவிக்க, அஷ்டமி வரும் நாட்களில் காலையில் வீட்டில் அல்லது அருகில் உள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு அல்லது பைரவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி மனதார வழிபடுங்கள். இத அஷ்டமியால் ஏற்படும் அனைத்து வகையான தடைகளையும் தகர்த்து வெற்றியைத் தரும்.
2. அஷ்டமி திதி மற்றும் அஸ்தம் நட்சத்திரம் அல்லது சித்திரை நட்சத்திரங்கள் இணைந்து வரும் நாளில் அவற்றின் அதீத பலன்களை முழுமையாக பெற, காலையில் சூரிய பகவானை நோக்கி, சுத்தமான நீரை அர்ப்பணித்து விட்டு, ஒரு சிறிய கைப்பிடி பச்சை பயிறு தானம் செய்யுங்கள். இது நட்சத்திர தோஷங்களை அகற்றி, உங்களின் அனைத்து முயற்சிகளையும் அசாத்திய வெற்றி பெற வைக்கும்.
3. செவ்வாய்கிழமையும், அஷ்டமியும் இணைந்து வரும் நாளில் உக்கிரமான ஆற்றலையும், ஆடி மாத ஆன்மீக அதிர்வுகளையும் முழுமையாக உங்கள் பக்கம் திருப்ப, காலையில் முழுகப்பெருமானை அல்லது குலதெய்வத்தை நினைத்து, செவ்வரளி மலர் அல்லது சிவப்பு நிற திரி போட்ட தீபம் ஏற்றி வழிபாட்டை செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த பலரத்தையும் உயர்த்தி, எத்தகைய தடைகளையும் தகர்த்து, வெற்றியை தேடி தரும்.

Source link