இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், “எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன்.
பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

முதற்கட்டமாக நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
