இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி

சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.

புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க இந்த நாள் கொண்டுவரப்பட்டது. புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க இந்த நாள் கொண்டுவரப்பட்டது. உலகில் உள்ள காட்டுப் புலிகளில் 75%-க்கும் அதிகமானவை இந்தியாவில் தான் வாழ்கின்றன. 2022-க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற சர்வதேச இலக்கை இந்தியா காலக்கெடுவிற்கு முன்பே சாதித்துக் காட்டியது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,167-க்கும் அதிகமான காட்டுப் புலிகள் உள்ளன.

பிரதமர் மோடி

இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

புலிப் பாதுகாப்பில் நமது வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்பும் முக்கியப் பங்காற்றியுள்ளன.

அந்த உணர்வோடு, உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டுவதிலும், மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.

உலகப் புலி தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் இந்திய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

இயற்கையோடு இயைந்து வாழும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று, நமது மக்களின் கூட்டு மனவுறுதியால் இந்தியாவின் புலிப் பாதுகாப்பு முயற்சிகள் உந்தப்படுகின்றன.

அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு மற்றும் புலிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முக்கியப் புலி காப்பகங்கள்

இந்தியாவில் தற்போது 54-க்கும் மேற்பட்ட புலி காப்பகங்கள் உள்ளன.

ஜிம் கார்பெட்- உத்தரகாண்ட்

கான்ஹா- மத்திய பிரதேசம்

ரந்தம்பூர்- ராஜஸ்தான்

சுந்தரவனக் காடுகள்- மேற்கு வங்கம்

பந்திப்பூர்- கர்நாடகா

Source link