ஒரே மாவட்டத்தில் பொறுப்பேற்ற ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி: வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராகக் கேத்ரின் சரண்யா நியமனம் – catherine saranya appointed as the first woman commissioner of vellore corporation

தமிழக நிர்வாக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

முக்கிய பணியிட மாற்றங்கள்:

தாகரே சுபம் த்யாந்தேராவ்: கோவை வணிகவரித் துறை (மாநில வரி) இணை ஆணையராகப் பணியாற்றி வந்த இவர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) மாற்றப்பட்டுள்ளார்.வீா் பிரதாப் சிங்: திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த இவர், தற்போது தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ந. பொன்மணி: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த இவர், திருச்சி மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ. கேத்தரின் சரண்யா: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக இருந்த இவர், தற்போது வேலூா் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே மாவட்டத்தில் பொறுப்பேற்ற ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி

இந்த நிலையில் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (SP) சிவராமன் ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். அவரது மனைவியான கேத்ரின் சரண்யா ஐஏஎஸ், தற்போது வேலூர் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார். ஒரே மாவட்டத்தில் கணவர் சிவராமன் காவல் துறை அதிகாரியாகவும் (SP), மனைவி மாநகராட்சி நிர்வாக ஆணையராகவும் (Commissioner) ஒரே நேரத்தில் பணியாற்றுவது நிர்வாக வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. வேலூர் மாநகராட்சி அமைக்கப்பட்டதற்குப் பிறகு ஆணையராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி கேத்ரின் சரண்யா என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link