குறிப்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும், E20 கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும் சுத்தமான பெட்ரோல் அல்லது டீசலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வாகன ஓட்டிகளுக்கு வழங்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
E20 ஜனதா பார்ட்டி, பெட்ரோலில் 20% எத்தனால் (எத்தனால் கலப்பு) கலக்கப்படுவதை எதிர்த்தும், நுகர்வோர் சுதந்திரம் மற்றும் மாற்று எரிபொருள் கோரியும் குரல் கொடுக்கிறது. E20 பெட்ரோலால் மைலேஜ் குறைவதுடன் வாகன எஞ்சினும் பாதிக்கப்படுவதாக கூறி பல வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் 38,000ம் மேற்பட்ட ஃபாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 3.82 லட்சம் ஃபாலோயர்களும் என சமூக வலைத்தளத்தில் இந்த E20 ஜனதா பார்ட்டிக்கு நிமிடத்துக்கு நிமிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது.
