குடை வச்சுக்கோங்க மக்களே… சென்னையில் இன்று இடி- மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் ஜூலை 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதே நேரம் மாநிலத்தின் சில பகுதிகளில் வரும் நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் 1 வருஷம் தான் டைம்… மொத்த யு.எஸ்- ஸும் க்ளோஸ்; அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா?

சென்னையைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே போன்று ஜூலை 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் சில பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 28 முதல் 30 வரை மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 31 அன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இதற்கிடையில், மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், ஊட்டியில் குறைந்தபட்சமாக 11.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

Source link