குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும், ரூ.1 கோடி வரையிலான விபத்துக் காப்பீடும், மேலும் பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மகளுக்கு திருமண உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மருத்துவக் காப்பீடு சிறப்பு அம்சங்கள் :
* அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.
* 46 வகையான தீவிர நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட 1,535 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணமில்லா (Cashless) முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
