கோவில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு

கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை திருடிய ஊழியர்கள் 4 பேர் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.

கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடந்திருக்கிறது.

ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பிறகு சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில் ஊழியர்கள் 4 பேர் உண்டியல் பணத்தை திருடியது உறுதியானதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தற்போது கோவில் உண்டியலை திருடிய ஊழியர்கள் 4 பேர் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் பின்வருமாறு:

ஊழியர்கள்

1.பாலசுப்பிரமணியன்

2.சரவணன்

3.பிரதீப் குமார்

4.கிருஷ்ணராஜ்

அதிகாரிகள்

1. ராம்குமார்

2. உதயகுமார்

3. குமார்

4. உஷா நந்தினி

Source link