மாநில அரசு வாங்கிய கடனை விட அதற்கு செலுத்தப்படும் வட்டியின் அளவு தான் மக்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அரசு பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பழைய கடன்களுக்கான வட்டி போன்ற அத்தியாவசியத் தேவைகளை சமாளிக்க, தொடர்ந்து ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பத்திரங்களை விற்பனை செய்து அரசு நிதியை திரட்டி வருகிறது.
இந்த ஆண்டின் மொத்த கடன் இலக்கு அதாவது நடப்பு முழு நிதியாண்டில் மட்டும் கூடுதலாக 1.22 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.82% தொகை, மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படாமல் வெறும் வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது. இத்தகைய கடன் சுமை வருங்காலத் தலைமுறையின் பொருளாதார சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும். எனவே அரசு தேவையற்ற செலவினங்களை குறைத்து வருவாயை பெருக்குவதற்கு சில மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழக அரசு 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. மேலும் இக்காலக் கட்டத்தில் வட்டியாக மட்டும் 14,618 கோடி ரூபாய்செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
