தமிழக மாணவர்களுக்கு 2 நாட்களில் சாதிச் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் வேலை உள்ளிட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு தற்போது சாதிச் சான்றிதழை விரைந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாகவே அரசு சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவை உடனடியாக தேவைப்படும்.

ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர்கள் சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது வழக்கம். இந்த விண்ணப்பங்களை விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பிறகே தாசில்தார் ஒப்புதலுக்கு செல்லும். இதனால் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்தக் கால தாமதத்தைக் குறைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது சமூக நீதித் துறை. இது சம்பந்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் தற்போது வெளியாகி உள்ளன.

சமூக நீதித் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:

* ஆதிதிராவிட மக்கள் சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தால் 2 நாட்களில் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

* அதேபோல் பழங்குடியின மக்களுக்கு 7 நாட்களுக்குள் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

* SC/ST சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தக் கூடாது.

* சாதிச் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Source link