இந்நிலையில் இது தொடர்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுடெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு என்பது பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதன்முதலில் எச்சரித்தோம். அதனால்தான், நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, திமுக ஆரம்பத்திலிருந்தே அதனை எதிர்த்து வருகிறது.
சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பாதை வகுத்துக் கொடுத்ததுமான தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: நீட் தேர்வை ஒழிப்பது (Abolition Of NEET) என்பது மட்டுமே. மற்ற அனைத்து கோரிக்கைகளையும் விட, நீட் தேர்வை ஒழிப்பது தான் இந்த போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வை வழங்கும். நீட்தேர்வை தடை செய். மாணவர்களை காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
