தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கு திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 8-ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link