நீட் தேர்வில் முறைகேடு இருப்பதாகப் பல ஆண்டுகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. நீட் மாணவர்களுக்குப் பயனளிப்பதில்லை. மாறாக, நீட்டால் மாணவர்களுக்கு மன அழுத்தம் தான் கூடுகிறது. நீட்டால், தகுதியுள்ள கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவ கல்விக்குள் நுழைய முடியாமல் போகிறது என்று, தமிழ்நாடு ஆரம்பம் முதலே இந்த நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.
ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர் வாழ்க்கைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற முறைகேடான சம்பவங்கள், மாணவர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிப்பதாகக் கூறி கரப்பான் பூச்சி கட்சியின் சார்பாகக் கடந்த மாதம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டம், கடந்த ஜூலை 20 முதல் நாடு முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வந்த நிலையில், அது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், “மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. கடந்த பத்து நாட்களாக நடந்த விஷயங்களை எனது தனிப்பட்ட அவமானமாக நான் கருதவில்லை. முதல் நாளில் இருந்தே இந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று வந்துள்ளேன். சட்ட நடவடிக்கையால் எந்த மாணவரின் எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடாது. இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்
