போலீசார் தடியடி நடத்தியபிறகும் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தரில் கூட்டம் குறையவில்லை. டெல்லியில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக சென்னை, பாட்னா, பெங்களூர், ஹைதராபாத் என இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இதற்கிடையே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறித்த வியக்கத்தக்க தகவல் ஒன்று இணைத்தில் வேகமாக பரவி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இன்று நாடு முழுவதும் மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் இதே தர்மேந்திர பிரதான் தான், சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு இதே வினாத்தாள் கசிவுப் பிரச்சனைக்காக ஒரு மாணவர் தலைவராக வீதியில் இறங்கிப் போராடினார் என்ற வரலாற்று உண்மை வெளிச்சத்திற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
