சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதிக்கு புதிய அரசு மருத்துவமனை கட்டி தர வேண்டும் என்று கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ நல்லதம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அளித்துள்ள பதில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2, 2026) பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தில் போது கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நல்லதம்பி சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களுக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, தலைவாசல் தாலுகாவிற்கு புதிய அரசு மருத்துவமனை கட்டி தர வேண்டும்.
தலைவாசலில் 35 பஞ்சாயத்து மக்கள்
தலைவாசல் பைபாஸ் சாலையில் அரசு நிலம் ஏராளமாக உள்ளது. எங்களுக்கு அவசர மருத்துவ வசதி வேண்டுமெனில் ஆத்தூர் நகரில் உள்ள பொது அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். தலைவாசல் தாலுகாவில் 35 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அவர்களுக்கு அருகிலேயே அரசு மருத்துவமனை ஒன்று கட்டி தந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்தார்.
விஜய் vs அண்ணாமலை என்பது பிஜேபியின் திட்டம்! தனியரசு பேட்டி
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நடக்கும் விபத்துகள்
கெங்கவல்லி எம்.எல்.ஏ நல்லதம்பி முன்வைத்த கோரிக்கை அமலுக்கு வந்தால் தலைவாசல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறுவர். தலைவாசல் வட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 79ஐ ஒட்டி ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. தலைவாசலில் இருந்து ஒருபக்கம் கோவிந்தம்பாளையம், மறுபக்கம் ஊனத்தூர், கள்ளக்குறிச்சி மார்க்கமாக கூட்ரோடு வரை வரிசையாக கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் உயர்தர வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் ஆத்தூர் நகருக்கு தான் பயணிக்க வேண்டும்.
பைபாஸ் சாலையில் புதிய மருத்துவமனை கோரிக்கை
ஆத்தூர் மருத்துவமனையிலும் பல்வேறு பரிசோதனைகள் செய்வதற்கு வசதிகள் இல்லை. மருந்துகள் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே தலைவாசல் பகுதியில் பைபாஸ் சாலையை ஒட்டி புதிய அரசு மருத்துவமனை ஒன்று உயர்தர வசதிகள் உடன் கட்டினால், அது சுற்றுவட்டாரத்தில் உள்ள 35 பஞ்சாயத்துகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயன்பெறுவர்.
தலைவாசல் தாலுகாவில் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை
தற்போது தலைவாசலில் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் அடிப்படை நோய்களை கண்டறிதல், முதலுதவி சிகிச்சை அளித்தல் போன்றவை மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது தாலுகாவாக செயல்பட்டு வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ப மருத்துவ வசதிகள் மட்டுமின்றி பிற உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Source link
