தவெக MLA வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆச்சு..? வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை..!! சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்மையில் நிறைவடைந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாகப்பங்கேற்றிருந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு, நேற்று அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையில், செப்டம்பர் 9ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சைகளும், சுவாச கருவி உதவியுடன் அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளபோதிலும் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் களமிறங்கி, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தவர் வி.எஸ். பாபு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் ‘முடிவுக்கு வர இயலாத வழக்கு’ என அறிவித்த நீதிபதி..!! தீர்ப்பு வழங்க முடியாமல் திணறல்..!! என்ன வழக்கு..?

Source link