தீவிர அரசியலுக்கு தயாராகும் அண்ணாமலை! புதிய கட்சி பெயர்,கொடி அடுத்த மாதம் அறிவிப்பு?

இந்த புதிய மக்கள் இயக்கத்தை, எதிர்காலத்தில் ஒரு பிராந்திய அரசியல் கட்சியாக மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த இயக்கத்தில் தற்போது வரை சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ம்தேதி அன்று பொள்ளாச்சியில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளதாகவும் வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரையும், புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Source link