இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு பயணமாக இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். ஒரு இந்திய துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு பயணம் இதுவாகும் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்பயணத்தின்போது, அவர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதுடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை, தமிழ் சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
