நிர்வாக வசதிகளுக்காக அறநிலையத்துறை 2 மண்டலங்களாகப் பிரிப்பு

சென்னை: நிர்​வாக வசதிக்​காக அறநிலை​யத்​துறை வடக்கு (சென்​னை) மற்​றும் தெற்கு (திருச்​சி) என 2 புதிய மண்​டலங்​களாகப் பிரிக்​கப்​பட்​டு, அவற்றை கண்​காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்​தஸ்​திலான கூடு​தல் ஆணை​யர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக அறநிலை​யத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட அரசாணை​: அறநிலை​யத் துறை​யின் கீழ் உள்ள கோயில்​களின் நிர்​வாகத்தை மேம்​படுத்​தும் நோக்​கில், கூடு​தல் ஆணை​யர் பதவி​களை உரு​வாக்கி அதி​காரங்​களை பகிர்ந்​தளிக்க, அரசுக்கு துறை ஆணை​யர் பரிந்​துரை செய்​திருந்​தார்.

அதையேற்று அறநிலை​யத்​துறை நிர்​வாக வசதிக்​காக வடக்கு (சென்​னை) மற்​றும் தெற்கு (திருச்​சி) என 2 புதிய மண்​டலங்​களாகப் பிரிக்​கப்​பட்​டு, அவற்​றைக் கண்​காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்​தஸ்​திலான கூடு​தல் ஆணை​யர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

வடக்கு மண்​டலத்​தில் சென்னை 1, 2, 3, காஞ்​சிபுரம், வேலூர், திரு​வள்​ளூர், விழுப்​புரம், கடலூர், திரு​வண்​ணா​மலை, தரு​மபுரி, சேலம், ஈரோடு

மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்த இணை ஆணை​யர் மண்​டலங்​கள் செயல்​படும். தெற்கு மண்​டலத்​தில் திருச்​சி, பெரம்​பலூர், திருப்​பூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, மதுரை, திண்​டுக்​கல், சிவகங்​கை, திருநெல்​வேலி மற்​றும் தூத்​துக்​குடி ஆகியவை இடம்​பெறும். புதி​தாகப் பொறுப்​பேற்​க​வுள்ள இந்த 2 கூடு​தல் ஆணை​யர்​களுக்​கும் முக்​கிய அதி​காரங்​கள் பகிர்ந்​தளிக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி இவர்​கள் கோயில் சொத்​துகள் மற்​றும் ஆவணங்​களை ஆய்வு செய்​தல், தணிக்கை கட்​ட​ணங்​களை வசூலித்​தல் போன்ற பணி​களை மேற்​கொள்​வார்​கள். நலத்திட்​டங்​களை ஆய்வு செய்​தல், கோயில் நிலங்​களின் வரு​வாயைக் கண்காணித்​தல், கோயில் சொத்​துகளில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் பணி​களைத் துரிதப்​படுத்​துதல் உள்​ளிட்ட பணி​களை​யும் மேற்​கொள்​வார்​கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சமீபத்​தில் பழனி, கரூர் போன்ற பகு​தி​களில் கோயில் நிலங்​கள் மற்​றும் அது​சார்ந்த பத்​திரப்​ப​திவு விவ​காரங்​கள் பெரும் சர்ச்​சைகளை ஏற்​படுத்​திய நிலை​யில், அறநிலை​யத் துறை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட இந்த சீர்​திருத்த நடவடிக்கை முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த​தாகக்​ கூறப்​படுகிறது.

Source link